கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு! பெண் ஒருவர் காயம்...

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு! பெண் ஒருவர் காயம்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் மாரவில ஹொரகொல்ல பகுதியில் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.இந்தக் கல் வீச்சுத் தாக்குதலால் 

பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்ற இருவரை 

மாரவில தலைமையக பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு