ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ரோகித் ; மும்பை அணி

ஆசிரியர் - Editor II
ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ரோகித் ; மும்பை அணி

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 16 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரோட முதல் வெற்றிய பதிவு செய்தது. 

ஒரு போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளனர். 

ஐ.பி.எல் ரி-20 தொடரில் ரோகித் சர்மா இறுதி 25 போட்டிகளில் முதல் அரைசதம் விளாசியுள்ளார். இந்த தொடரோட முதல் அரைசதம். ஐ.பி.எல் தொடரில் இது அவருக்கு 41 ஆவது அரைசதம் ஆகும். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 6 ஆவது அரைசதம். அருண் ஜெட்லி மைதானத்தில் 3 ஆவது ஐ.பி.ல் அரை சதம்.  இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதன் மூலம் ஐ.பி.எல் போட்டியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் என்ற சாதனையை ரோகித் சர்மா (19 முறை) படைத்துள்ளார். 

இந்த போட்டியில் டெல்லி அணியின் சகல இலக்குகளையும் வீழ்த்தியதன் மூலமாக 31 முறை எதிரணியின் சகல இலக்குகளையும் வீழ்த்திய அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 

ஐ.பி.எல் தொடரில் அதிக முறை இறுதி பந்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி (7 முறை) 2 ஆவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சென்னை அணி (8 முறை) உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு