ரசிகர்களுக்கு தளபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஆசிரியர் - Editor II
ரசிகர்களுக்கு தளபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்தி வரும் நிலையில் தற்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அதிரடியாக பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி தொடர்பில் ஆலோசனை செய்ய தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும் நலத்திட்ட உதவிகள் செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்றத்தை தளபதி விஜய் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சில வெற்றி பெற்றனர் என்பதும் வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களை நேரில் அழைத்து தளபதி விஜய் சில அறிவுரைகள் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் அமைப்பாக வரும் காலத்தில் மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு