அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

ஆசிரியர் - Editor I
அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

நாடு முழுவதும் அதியுச்ச பாதுகாப்புடன் வழமைபோன்றே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள உள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொிவித்திருக்கின்றார். 

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்தபோதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.

மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு