15 வயதில் HIV பரிசோதனை செய்த கிரிக்கெட் வீரர்!! -அப்பாவிடம் அடிவாங்கிய சம்பவம் குறித்து மனம் திறந்த தவான்-

ஆசிரியர் - Editor II
15 வயதில் HIV பரிசோதனை செய்த கிரிக்கெட் வீரர்!! -அப்பாவிடம் அடிவாங்கிய சம்பவம் குறித்து மனம் திறந்த தவான்-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஷிகர் தவான் 14-15 வயதில் எயிட்ஸ் தொற்று நோய் தொடர்பான எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டதாக கூறியுள்ளமை அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் ரி-20 தொடர் வரும் 31 ஆம் திகதி அகமதாபாத்தில் ஆரம்பமாக உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதுகின்றன.

இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கு பஞ்சாப் அணியின் தலைவராக ஷிகர் தவான் விளையாட உள்ளார்.

இந்நிலையில் 14 - 15 வயதில் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொண்டதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பேட்டி ஒன்றில் பேசிய அவர் தனக்கு 14 - 15 வயது இருக்கும் போது, மணாலிக்கு சென்று, என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் முதுகில் பச்சை குத்தியிருந்தேன்.

நான் அதை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தேன். சுமார் 3 - 4 மாதங்களுக்கு பின் என் தந்தைக்கு நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.

டாட்டூவைக் குத்திய பின் நான் கொஞ்சம் பயந்தேன். எனக்கு டாட்டு குத்திய ஊசியை வைத்து முதலில் எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை.

எனவே நான் எச் ஐ.வி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை நெகட்டிவாக உள்ளது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

நான் குத்திய முதல் டாட்டு ஸ்கார்பியோ (தேள்) என்னுடைய முதுகில் குத்தினேன். ஏனென்றால் அந்த நேரத்தில், அது என் எண்ணமாக இருந்தது. பின் நான் அதை ஒரு டிசைன் செய்தேன்.

என் கையிலும் சிவபெருமான் பச்சை குத்தினேன். அர்ஜுனன் பச்சையும் குத்தி உள்ளேன். ஏனென்றால் அவர் வில் எய்வதில் மிகச்சிறந்தவர் என்றார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு