பரீட்சையில் மணமகளுக்கு மதிப்பெண் குறைவு!! -திருமணத்தை நிறுத்த மணமகன்-

ஆசிரியர் - Editor II
பரீட்சையில் மணமகளுக்கு மதிப்பெண் குறைவு!! -திருமணத்தை நிறுத்த மணமகன்-

மணமகள் பரீட்சையில் மோசமான மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறி, நடைபெற இருந்த திருமணத்தை மணமகன் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கன்னோஜ் மாவட்டம், திர்வா கோட்வாலி பகுதியில் மணமகள் சோனி மற்றும் பகன்வா கிராமத்தைச் சேர்ந்த ராம்சங்கரின் மகன் சோனு ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் மணமகன் சோனு திடீரென மணமகளின் 12 ஆம் வகுப்பு பரீட்சையில் மதிப்பெண் மோசமாக இருப்பதாக கூறி நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் வரதட்சணைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக மணமகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மணமகளின் வீட்டார் மணமகனின் உறவினர்களை சமாதானம் செய்ய முயன்றும், மணமகளின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி மணமகனின் வீட்டார் உறவை முறிக்க முயன்ற நிலையில், மணமகளின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டின் படி, டிசம்பர் 4 ஆம் திகதி, 2022 இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு, மணமகள் வீட்டார் சார்பில் இருந்து ”கோத் பாராய்” விழாவும் 60,000 செலவில் நடத்தப்பட்டது. மேலும் இதில் மணமகனுக்கு 15.000 மதிப்புள்ள தங்க மோதிரமும்  போடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது மணமகனின் வீட்டார் கூடுதல் வரதட்சணை எதிர்பார்ப்பதுடன்,  அவற்றை தன்னால் தர முடியாத நிலையில், அதற்கு பல்வேறு காரணங்கள் கூறி திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதாக மணமகளின் தந்தை முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் அறிவுரை கூறி வழக்கை தீர்க்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு