அவுஸ்திரேலியாவில் மீள களமிறங்கும் யாழ் வீராங்கனை தர்ஜினி

ஆசிரியர் - Editor II
அவுஸ்திரேலியாவில் மீள களமிறங்கும் யாழ் வீராங்கனை தர்ஜினி

அவுஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் முன்னணி வலைப்பந்தாட்ட தொடர்களில் ஒன்றான விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக்கின் வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ் அணியில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இலங்கையின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சேர்க்கப்பட்டுள்ளார். 

விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக்கின் முன்னணி அணியான வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ், 2009 ஆம் ஆண்டு இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து 14 முறை சம்பியனாக முடிசூடியுள்ளது. அதுமாத்திரமின்றி நடப்பு சம்பியனாகவும் இந்த அணி களமிறங்குகின்றது.

விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக் தொடரானது புதன்கிழமை (மார்ச் 15) ஆரம்பமாகவுள்ளதுடன் 19 சுற்றுகளாக நடைபெற்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட இந்த தொடரில் கடந்த ஆண்டு விளையாடியிருந்த இலங்கையின் முன்னணி வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் களமிறங்கவுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்டத்தில் மட்டும் இல்லாமல் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்துவரும் இவர், உலகின் சிறந்த ஷூட்டர் என்ற பெருமையை தக்கவைத்திருக்கிறார்.

இதேவேளை, கடந்த ஆண்டு மாலைத்தீவுகளில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருதினை இவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு