50 பேரப் பிள்ளைகளை கண்ட உலகின் மிகவும் வயதான பெண் 128 வயதில் மரணம்

ஆசிரியர் - Editor II
50 பேரப் பிள்ளைகளை கண்ட உலகின் மிகவும் வயதான பெண் 128 வயதில் மரணம்

தென்னாபிரிக்காவில் உலகின் மிகவும் வயதான பெண்ணொருவர் தனது 128 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

குறித்த நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜோஹன்னா மசிபுகோ. 1894 ஆம் ஆண்டு பிறந்த இவர் தான் உலகின் மிகவும் வயதான ஆவார்.

128 வயதான மசிபுகோ தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பக்கவாதத்தினால் மசிபுகோ உயிரிழந்திருக்கலாம் என அவரது பராமரிப்பாளரும், மருமகளுமான தந்தீவி வெசின்யானா தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது 128 ஆவது பிறந்தநாளில் மசிபுகோ பேசியபோது, 'இவ்வளவு வருடங்களுக்கு பின்னும் நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன்? என்னைச் சுற்றியிருந்தவர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். நான் எப்போது இறப்பேன்? உயிரோடு இருந்து என்ன பயன்? நான் ஒன்றும் செய்யாமல் இங்கு அமர்ந்திருப்பதால் உலகம் என்னை சோர்வடையச் செய்தது' என கூறினார்.

மசிபுகோவுக்கு பிறந்த பிள்ளைகள் 7 ஆவர். அவர்களில் இருவர் தான் உயிருடன் உள்ளனர். மேலும் 50 பேரப் பிள்ளைகள் மற்றும் சில கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

ஜோஹன்னா மசிபுகோ வரும் சனிக்கிழமை அன்று ஜோபர்டனில் அடக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு