இனி ஞாயிறு நள்ளிரவில் QR குறியீடு புதுப்பிக்கப்படாது! எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள புதிய அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
இனி ஞாயிறு நள்ளிரவில் QR குறியீடு புதுப்பிக்கப்படாது! எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள புதிய அறிவிப்பு...

இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பிரதி செவ்வாய் கிழமை நள்ளிரவு QR குறியீட்டுக்கான கோட்டா புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது. 

இதனால் ஏற்படும் விநியோகச் செலவைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, QR கோட்டா மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் இது தொடர்பான ட்வீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு