மெஸ்சிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்த துப்பாக்கிதாரிகள்

ஆசிரியர் - Editor II
மெஸ்சிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்த துப்பாக்கிதாரிகள்

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்சிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படும் வகையில், அவருக்கு சொந்தமான சூப்பர் மார்கெட்டில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரான 35 வயதான மெஸ்சி கத்தாரில் நடந்த 'பிபா' உலக கோப்பை தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அர்ஜென்டினா அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். அண்மையில் 'பிபா' சார்பில் வழங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் இவரது சொந்த ஊரான ரோசாரியோவில் மெஸ்சி மனைவி அன்டோநெலாவுக்கு சொந்தமான சூப்பர் மார்கெட் உள்ளது. 

இதை அன்டோநெலா உறவினர் நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிலில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பூட்டிக்கிடந்த சூப்பர் மார்கெட்டில் 14 முறை துப்பாக்கிசூடு நடத்தினர்.

பின்னர் அங்கு ஒரு துண்டு செய்தியை விட்டுச் சென்றனர். அதில், மெஸ்சி, உனக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ஜாவ்கின் ஒரு போதை வியாபாரி, அவரால் கூட உங்களை காப்பாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு