அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர்!! -31 நாட்களாக புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த அதிசயம்-

ஆசிரியர் - Editor II
அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர்!! -31 நாட்களாக புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த அதிசயம்-

அமேசான் காடுகளில் தொலைந்து போனதாக கூறப்படும் 30 வயதான நபர் ஒருவர், உணவாக புழுக்களை சாப்பிட்டும், மழை நீரை குடித்தும் உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

ஜொனாட்டன் அகோஸ்டா (வயது 30) என்ற நபர் தனது 4 நண்பர்களுடன் வடக்கு பொலிவியாவில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது காட்டில் பிரிந்து சென்று தொலைந்து போகியுள்ளார்.

இதையடுத்து முடுக்கி விடப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஜொனாட்டன் அகோஸ்டா 31 நாட்களுக்கு பின் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

அகோஸ்டா காணாமல் போகி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மட்டும் 17 கிலோ எடையை இழந்துள்ளார்.

மேலும் உள்ளூர் மற்றும் நண்பர்களை கொண்ட ஒரு தேடல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவர் கணுக்கால் சிதைந்த நிலையில் நீரிழப்புடன் காணப்பட்டார்.

இந்நிலையில் தான் உயிருடன் மீட்கப்பட்டது தொடர்பாக கண்ணீருடன் பேசியுள்ள அகோஸ்டா:-

இது நம்பமுடியாதது, மக்கள் நீண்ட காலமாக தேடலைத் தொடர்ந்தனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை  என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் நான் புழுக்களை சாப்பிட்டேன், பூச்சிகளை சாப்பிட்டேன், என்னுடைய காலணிகளில் சேகரிக்கப்பட்ட மழை நீரைக் குடித்தேன், அந்த நேரத்தில் உயிர் வாழ நான் செய்ய வேண்டி இருந்த அனைத்தையும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு