இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! -கிரீஸ் நாட்டில் 29 பேர் பலி; 85 பேர் படுகாயம்-

ஆசிரியர் - Editor II
இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! -கிரீஸ் நாட்டில் 29 பேர் பலி; 85 பேர் படுகாயம்-

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று புதன்கிழமை 350 பயணிகளுடன் புறப்பட்டது.

லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. 

இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது. 

இந்த கோர விபத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு