மணப்பெண்ணின் எடைக்கு நிகராக தங்கம்!! -துபாயில் நடந்த ஆடம்பரமான திருமண நிகழ்வு-

ஆசிரியர் - Editor II
மணப்பெண்ணின் எடைக்கு நிகராக தங்கம்!! -துபாயில் நடந்த ஆடம்பரமான திருமண நிகழ்வு-

துபாய் நாட்டில் நடந்த ஆடம்பரமான பாகிஸ்தானிய திருமண நிகழ்வு ஒன்றில் மணப்பெண்ணின் எடைக்கு நிகராக தங்கம் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

இருப்பினும் குறித்த தங்கம் போலியானது என்றும் திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே என்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கம் அலங்காரமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது, மேலும் இந்த திருமண நடவடிக்கை நன்கு அறியப்பட்ட பாலிவுட் படமான ஜோதா அக்பரில் இடம்பெற்ற காட்சியை பிரதிபலித்தது. திருமண கொண்டாட்டத்தை பிரமாண்டமாக நடத்த மணமகன் இப்படி ஒரு நிகழ்வை செய்தாக கூறப்படுகிறது.

இதுபோன்று திருமணத்தில் ஆடம்பரமான தங்கத்தைப் பயன்படுத்துவது தெற்காசிய நாடுகளில் ஆடம்பரமான திருமணச் செலவுகளின் பாரம்பரியம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஆடம்பரமான திருமணச் செலவுகளின் போக்கு குடும்பங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், திருமணங்கள் விலையுயர்ந்த விழாக்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாகவும் கூறும் பலரிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு