குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவரின் சடலம்!! -கல்லறைக்குக் கொண்டு செல்லும் போது திடீரென நிகழ்ந்த அற்புதம்-

ஆசிரியர் - Editor II
குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவரின் சடலம்!! -கல்லறைக்குக் கொண்டு செல்லும் போது திடீரென நிகழ்ந்த அற்புதம்-

சிரியாவில் நடந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவருடைய உடல் 2 நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பின்னர்ன், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த அதிர்ச்சி சம்பவம்  ஒன்று நிகழ்ந்துள்ளது.

நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கிடையே இருந்து அஹமது என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரை முறைப்படி அவரது உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக, அவரது உடல் வைத்தியசாலை ஒன்றில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

2 நாட்களுக்குப் பின், அவரது உறவினர் ஒருவர் வந்து அவரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, இறந்த உடலை வைக்கும் பை ஒன்றில் வைத்து அஹமதுவின் உடல் அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அஹமதுவின் உடல் இறுதிச்சடங்குக்காக கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்போது திடீரென அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பை அசைந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பையைத் திறந்துபார்க்க, அஹமது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அஹமதுவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு