புதுமணத் தம்பதியினர் அறைக்குள் கேட்ட அலறல் சத்தம்!! -திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சற்றுமுன் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்-

ஆசிரியர் - Editor II
புதுமணத் தம்பதியினர் அறைக்குள் கேட்ட அலறல் சத்தம்!! -திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சற்றுமுன் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்-

இந்தியாவின் மாநிலம் சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் புதுமண தம்பதி இறந்து கிடந்த சம்பவம் பெரும் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

திக்ரபாரா பொலிஸ் பிரிவுக்கு உட்பட பிரிஜ்நகரில் நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஸ்லாம் (வயது 24) மற்றும் கஹ்காஷா பானோ (வயது 22) கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டனர், அவர்களின் திருமண வரவேற்பு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற இருந்தது. அவர்கள் தங்கள் அறைக்குள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது மணமகளின் அலறல்களைக் கேட்டு மணமகனின் தாய் அங்கு சென்று பார்த்தார்.

அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது, பல முறை அழைத்தும் அவர்கள் பதிலளிக்காதபோது, ​​​​குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள், அவர்கள் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிசார் கதவை உடைத்து, கத்தியால் குத்தப்பட்ட அவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த நபர் தனது மனைவியை கத்தியால் தாக்கி, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு