யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான விசேட அறிவிப்பு! யாழ்.மாவட்டச் செயலர் தலைமையில் ஒழுங்கமைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான விசேட அறிவிப்பு! யாழ்.மாவட்டச் செயலர் தலைமையில் ஒழுங்கமைப்பு..

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இந்த வரும் யாழ்.மாவட்டச் செயலரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்.ஆயர் இல்லம் , இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திருவிழா தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் யாழ்.நகரிலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.  

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவனில் இருந்து காலை 6 மணி முதல் மு.ப 11மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவனில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய இரு வழிப் பயணக் கட்டணம் ரூ.2000 ஆகும். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் 

தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் மார்ச் மாதம் 3 ஆம் திகதி பி.ப 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மார்ச் மாதம் 4 ஆம் திகதி கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவானது இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் 

மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு