நாட்டு மக்களுக்கு மின் சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி! இன்று தொடக்கம் இல்லை....

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு மின் சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி! இன்று தொடக்கம் இல்லை....

நாட்டில் இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டண அதிகரிப்பு அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு