இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோகினி மாரசிங்க தலைமையிலான குழு இன்று வடமாகாணத்திற்கு விஜயம்..

ஆசிரியர் - Editor I
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோகினி மாரசிங்க தலைமையிலான குழு இன்று வடமாகாணத்திற்கு விஜயம்..

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுநிலை உயர் நீதிமன்ற நீதிபதி ரோகினி மாரசிங்க தலைமையிலான குழு இன்று வடமாகாணத்திற்க விஜயம் செய்யவுள்ளது. 

இன்றும் 17ஆம் மற்றும் 18 ஆம் திகதியும் வடமாகாணத்தில் கள விஜயத்தினை மேற்கொண்டு தற்போதுள்ள மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ளனர்.

குறித்த கள விஜயத்தின் ஊடாக வடமாகாணத்தில் தற்போது நிலவுகின்ற மனித உரிமை பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை 

பல்வேறு தரப்புக்களைச் சந்தித்து ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு