காதலர் தினத்தை கொண்டாட சுற்றுலா சென்ற காதல் ஜோடி!! -கடலில் மூழ்கி பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II
காதலர் தினத்தை கொண்டாட சுற்றுலா சென்ற காதல் ஜோடி!! -கடலில் மூழ்கி பரிதாப பலி-

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக காதல் ஜோடி கோவா சென்ற நிலையில் அங்கு கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். 

இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த  விபு சர்மா (வயது 27), சுப்ரியா துபே (வயது 26) ஆகிய இருவரும் தமது பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். 

இதனிடையே, காதலர் தினத்தை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன் விபு சர்மாவும், சுப்ரியா துபேவும் கோவா சென்றுள்ளனர். அவர்கள் கோவாவில் தங்கி பல்வேறு சுற்றுலா சென்றுள்ளனர். 

இந்நிலையில், காதலர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் காதல் ஜோடி கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது எதிராராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். 

இது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

ஆனால், 2 பேரையும் பரிசோதித்த வைத்தியர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு