தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்!! -துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம்-

ஆசிரியர் - Editor II
தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்!! -துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம்-

துருக்கியில் நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்கு சிக்கிய சிறுவன் ஒருவர் தனது சிறுநீரை தானே குடித்து உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அங்கு பேரழிவு ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மீட்க்கப்பட்டு வருகின்றனர். ஒருபுறம், கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் யாரும் உயிருடன் இருக்கமுடியுமா என்ற நம்பிக்கைகள் மங்கி வருகின்றன.

அனால், அதே நேரம், 2 மாதம் குழந்தை கூட 5 நாட்கள் தாக்குப்பிடித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்னும் பல உயிர்கள் இதேபோல் மீட்கப்படலாம் என நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்நிலையில் துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து 17 வயது சிறுவன் 94 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டார். அவர், உயிர் பிழைத்திருக்க அவரது சொந்த சிறுநீரை குடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட அவர் துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு