துருக்கி, சிரியா நிலநடுக்கம்!! -62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்கள்-

ஆசிரியர் - Editor II
துருக்கி, சிரியா நிலநடுக்கம்!! -62 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்கள்-

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவார்களை மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்து வரும் நிலையில், 62 மணி நேரத்துக்குப் பின் இரண்டு பெண்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது.

அங்கு கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. இதில் சிக்கியவாகளை மீட்கும் பணிகள் இரவும் பகலுமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 25 வயதாகும் பத்மா டெமிர் என்ற பெண்ணும், அவரது சகோதரி மெர்வேவும் நேற்று புதன்கிழமை இரவு மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 62 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இரு பெண்கள் உயிரோடு மீட்கப்பட்டது, மீட்புக் குழுவினரை உற்சகத்தில் ஆழ்த்தியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு