நாளை காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
நாளை காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு...

நாடு முழுவதும் நாளை வைத்தியர்கள் 24 மணித்தியால பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்ப்டுள்ளது. 

நாளை காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் அதாவது 9ம் திகதி காலை 8 மணிவரை இடம்பெறவுள்ளது. 

மேற்படி தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் கலாநிதி சமில் வீரசிஙக கூறியிருக்கின்றார். 

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 

இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படுவதாக வைத்தியர் சம்மில் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு