போதை விருந்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்! 9 பெண்கள் உட்பட 34 பேர் கைது, பெருமளவு போதைப் பொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
போதை விருந்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்! 9 பெண்கள் உட்பட 34 பேர் கைது, பெருமளவு போதைப் பொருள் மீட்பு..

சட்டவிரோதமாக முகநுால் மூலமாக ஒன்றுகூட்டப்பட்ட போதை விருந்தில் கலந்துகொண்ட பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்தருக்கின்றனர். 

பாணந்துறை வடக்கில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பில் 9 பெண்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் கஞ்சா, குஷ் மற்றும் மதுபானம் போன்ற பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விருந்தின்போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குழுவொன்றை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் 

ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு