நகைக்கடை உரிமையாளர் தேவாலயத்திற்குள் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
நகைக்கடை உரிமையாளர் தேவாலயத்திற்குள் சடலமாக மீட்பு!

நகைக்கடை உரிமையாளர் தேவாலயத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பு - மல்லிகைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு அந்தோனியார் கோவில் 1ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இவர் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் அமைந்துள்ள 

காட்டு அந்தோனியார் கோவிலுக்குள் சடலமான நிலையில் காணப்பட்டுள்ளார். இவர் வழமையாக காட்டு அந்தோனியார் கோவிலுக்கு சென்றுவருவதாகவும் 

நேற்று (03) காலையும் கடையினை திறக்கவந்துவிட்டு கோவிலுக்கு சென்றுவருவதாக சொல்லி விட்டு சென்றுள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு