மீண்டும் பதற்றம்..! பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
மீண்டும் பதற்றம்..! பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்...

கொழும்பு - மருதானை எல்பிஸ்டன் மண்டபம் முன்பாக நேற்றிரவு மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டிருக்கின்றது. 

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று (03) பிற்பகல் முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து 24 மணி நேரமும் சத்தியாகிரகத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு