பிரித்தானியாவில் காணாமல் போன 16 வயது பெண்!! -பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை-

ஆசிரியர் - Editor II
பிரித்தானியாவில் காணாமல் போன 16 வயது பெண்!! -பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை-

பிரித்தானியாவில் காணாமல் போன 16 வயது சிறுமி குறித்து பொலிசார் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

வடக்கு மான்செஸ்டரின் ப்ளாக்லி பகுதியை சேர்ந்த 16 வயதான லோயிஸ் லாரன்ஸ் என்பவர் கடந்த 27 ஆம் திகதி காணாமல் போனார். தற்போது வரையில் அவர் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதன்படி அவர் ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் காணாமல் போன போது கருப்பு அல்லது சாம்பல் நிற லெகிங்ஸ் அணிந்திருந்தார், கருப்பு கோட் அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

குறித்த இளம் பெண் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு