இலங்கையில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டியுங்கள்! யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டியுங்கள்! யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு..

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 4ம் திகதி வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. 

பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 4ம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி 

யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு