5ம் திகதி தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 350 - 400 ரூபாயினால் உயர்வு!

ஆசிரியர் - Editor I
5ம் திகதி தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 350 - 400 ரூபாயினால் உயர்வு!

லிட்ரோ சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலின்டரின் விலை 350 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய் வரை உயர்த்தப்படும் என லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் இடம்பெறும் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. 

எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துவருவதே 

எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு