மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க திட்டம்! மழை வீழ்ச்சி போதாதாம்...

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க திட்டம்! மழை வீழ்ச்சி போதாதாம்...

மின்வெட்டு நேரத்தை மேலும் 10 நிமிடங்களால் அதிகரிக்கவுள்ளதாக மின்சாரசபை தொிவித்திருக்கின்றது. 

இதுவரை மின் துண்டிப்பு நேரம் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களாக இருந்த நிலையில் அது மேலும் 10 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

என்றாலும் உயர் தர பரீட்சை இடம்பெறுவதால், எதிர்வரும் தினங்களில் மின் துண்டிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. 

இதன்போது எதிர்பார்த்த மழைவீழ்ச்சி நீர் மின்சார உற்பத்தி பிரதேசங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் 

மீண்டும் 1ம் திகதி தொடக்கம்  மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சாரசபை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் மின்சாரம் துண்டிப்பதா இல்லையா என எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 

என்றாலும் இதுதொடர்பாக இலங்கை மின்சாரசபை அறிவிப்பொன்றை மேற்கொள்ள இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு