இந்திய வம்சாவளி நபர் சடலமாக மீட்பு!! -பிரித்தானிய காட்டுப்பகுதியில் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
இந்திய வம்சாவளி நபர் சடலமாக மீட்பு!! -பிரித்தானிய காட்டுப்பகுதியில் சம்பவம்-

பிரித்தானியா நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த வருடம் காணாமல் போன 58 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதியில் இறந்து கிடந்தார்.

4 பிள்ளைகளின் தந்தையான ஹர்ஜிந்தர் 'ஹாரி' தகார், கடந்த வருடம் ஒக்டோபரில் ஷ்ரோப்ஷயரில் உள்ள டெல்போர்டின் ஸ்டிர்ச்லி பூல்ஸ் பகுதியில் காணாமல் போனார்.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் டெல்போர்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உடல், அவருடையது தான் என மேற்கு மெர்சியா பொலிஸார் முறையாக அடையாளம் கண்டு உறுதி செய்தது.

ஹர்ஜிந்தரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹர்ஜிந்தர் காணாமல் போன சில மாதங்களில் மேற்கு மெர்சியா பொலிஸார் பல விசாரணையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு