200 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!! -ஆச்சரியபட வைக்கும் மூதாட்டிகள்-

ஆசிரியர் - Editor II
200 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!! -ஆச்சரியபட வைக்கும் மூதாட்டிகள்-

இத்தாலி நாட்டில் இரட்டை சகோதரிகளான  பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோர் தங்களது 200 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

தற்போதைய கால சூழ்நிலையில் தனிமனிதர் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வரையாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் இத்தாலிய சார்ந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிக்கார்டி என்ற இரட்டை சகோதரிகள் தங்கள் 100 ஆவது பிறந்தநாளை இணைந்து கொண்டாடி அனைவருக்கும் பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். 1923 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி பிறந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிக்கார்டி திங்களன்று தங்கள் 100 ஆவது வயதினை அடைந்தனர், இந்த நாளை அவர்கள் "200வது பிறந்த நாளாக" கொண்டாடினர். 

இவர்களுக்கு கின்னல் உலக சாதனை விருதும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக, ரெசிடென்சியா சான்டா மரியா டெல் டுரா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு