திருமணத்திற்கு தயாராகி மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்!! -திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு தயாராகி மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்!! -திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்-

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணமகள் ஒருவர் திருமணத்திற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்ற போது கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு திறக்காமல் தாமதப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

2022ம் ஆண்டு குறித்த நாட்டில் உள்ள மஸ்பேட் நகரில் ஓகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணை சற்று பீதியடைய வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கஹீ அன்னே மேரி சோகா என அடையாளம் காணப்பட்ட மணமகள் திருமண நிகழ்விற்காக தேவாலயத்தின் உள்ளே செல்ல தயாரானார்.

ஆனால் தேவாலயத்தின் கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு சிறிது நேரம் திறக்க முடியாமல் போனதால் மணமகள் சற்று பதற்றத்துடன் கதவுகளின் இடையில் செல்ல தயாரானார்.

இருப்பினும் ஒருங்கிணைப்பாளர்கள் அங்கிருந்ததால் அதைத் திறக்க தங்களால் இயன்றதைச் செய்தார்கள். கிட்டத்தட்ட 20 வினாடிகள் போராட்டத்திற்கு பின் கதவுகள் திறக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு