தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்!! -கைதான 13 வயது இங்கிலாந்து சிறுவன்-

ஆசிரியர் - Editor II
தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்!! -கைதான 13 வயது இங்கிலாந்து சிறுவன்-

இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். 

இங்கிலாந்தின் டெலிபோர்ட் நகரிலுள்ள ஹாட்லி மற்றும் லீகோமெரி ஆகிய பகுதிகளில், தொடர்ச்சியாக 16 முதல் 34 வயதுவரையுள்ள இளம்பெண்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளானார்கள்.

கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை பொலிசாருக்கு இந்த தாக்குதல்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகள் வந்துள்ளன.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி சிக்கியபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த பாலியல் தாக்குதல்களை நடத்தியது ஒரு 13 வயது சிறுவன்.

அந்த சிறுவன் மீது, 9 பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள், 2 வன்புணர்வு முயற்சிக் குற்றச்சாட்டுகள் மற்றும் உடல் ரீதியாக தாக்குதல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கிடர்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்த சிறுவன், தற்போது உள்ளூர் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளான். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு