தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வ ஒத்துழைப்பை தாருங்கள்!

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வ ஒத்துழைப்பை தாருங்கள்!

இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கும் இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 


இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் - கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு