கர்ப்பவதியான 15 வயது சிறுமியுடன் கர்ப்பவதிகளுக்கான கிளினிக்கிற்கு சென்ற 21 வயது இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
கர்ப்பவதியான 15 வயது சிறுமியுடன் கர்ப்பவதிகளுக்கான கிளினிக்கிற்கு சென்ற 21 வயது இளைஞன் கைது!

15 வயதான சிறுமியுடன் 8 மாதங்களாக குடும்பம் நடாத்தி சிறுமியை கர்ப்பவதியாக்கிய சம்பவம் தொடர்பாக 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

கடந்த 8 மாதங்களாக இளைஞனும், சிறுமியும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில் சிறுமி கர்ப்பவதி ஆகியுள்ளார். 

இதனையடுத்து இளைஞன் சிறுமியை அழைத்துக் கொண்டுமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறும் கர்ப்பவதிகளுக்காக கிளினிக்கிற்கு சென்றுள்ளான். 

இதன்போது கர்ப்பவதிக்கு 15 வயது என்பதை அறிந்து கொண்டு வைத்தியர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். 

இதன்போது எதிர்வரும் 26ம் திகதிவரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை சிறுமியையும் இளைஞனையும் ஒன்றாக இருக்க இடமளித்தமைக்காக பெற்றோரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு