2 வருடங்களாக அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை! வடமாகாண கல்வி அமைச்சின் இயலாமையை கண்டித்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
2 வருடங்களாக அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை! வடமாகாண கல்வி அமைச்சின் இயலாமையை கண்டித்து போராட்டம்..

2 வருடங்களாக அதிபர் நியமிக்கப்படாமையை கண்டித்து மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். 

இன்று காலை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

A9 வீதியில் அமைந்ள்ள குறித்த பாடசாலைக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் பாடசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும்,

தெரிவித்து குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் 

மற்றும் பழைய மாணவர்களுடன் துணுக்காய் வலையக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் வழங்கிய உறுதி மொழியை அடுத்து 

குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு