யாழ்ப்பாணத்திற்கு முட்டை ஏற்றிவந்த வாகனம் ஏ -9 வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திற்கு முட்டை ஏற்றிவந்த வாகனம் ஏ -9 வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்..

யாழ்ப்பாணத்திற்கு முட்டை ஏற்றிவந்த பட்டா வாகனம் மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதல் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 

சம்பவத்தில் பட்டா வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பளை வேம்போடுகேணி பகுதியைச் சேர்ந்த 23 வயதான உதவியாளர் ரமேஷ்வரன் சாரங்கன் என்பவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு