ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞன் ஒருவனை கட்டிவைத்து அடித்து சித்திரவதை! அதிரடியாக நுழைந்து காப்பாற்றிய இராணுவம்..

ஆசிரியர் - Editor I
ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞன் ஒருவனை கட்டிவைத்து அடித்து சித்திரவதை! அதிரடியாக நுழைந்து காப்பாற்றிய இராணுவம்..

முற்பகை காரணமாக குடும்பம் ஒன்றினால் மரத்தில் கட்டிவைத்து சித்திரவதை செய்யப்பட்ட இளைஞனை இராணுவத்தினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் விசுவமடு - தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பேரில், இராணுவ அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ​பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் இராணுவ அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிரைக் காப்பாற்றினர்.

பின்னர், தாக்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த ஜனவரி 8-ம் திகதி இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தபோது 

அவர்களுக்கிடையில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது தேராவில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை 

அதே பகுதியில் வசிக்கும் மற்றுமொரு இளைஞன் திருட்டு குற்றம் சுமத்தி தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினர் 

பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞரைப் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து அவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய நிலையில் 

இராணுவ அதிகாரிகள் தலையிட்டு அவரை காப்பாற்றிள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு