வடகிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தை பொங்கல் தினத்தில் விசேட அறிவிப்பு!! ஜனாதிபதி கூட்டமைப்பிடம் கூறினாராம்...

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தை பொங்கல் தினத்தில் விசேட அறிவிப்பு!! ஜனாதிபதி கூட்டமைப்பிடம் கூறினாராம்...

வடகிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக எதிர்வரும 15ம் திகதி தைப் பொங்கல் தினத்தில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படும். என ஜனாதிபதி கூறியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு