உமி மூடைக்குள் வைத்து பயணிகள் பேருந்தின் மூலம் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கசிப்பு கொண்டுவந்த 3 பேருக்கு நடந்த தரமான சம்பவம்..

ஆசிரியர் - Editor I
உமி மூடைக்குள் வைத்து பயணிகள் பேருந்தின் மூலம் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கசிப்பு கொண்டுவந்த 3 பேருக்கு நடந்த தரமான சம்பவம்..

உமிக்குள் மறைத்து பயணிகள் பேருந்தில் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கசிப்பு கொண்டுவந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியாலை - மாம்பழம் சந்தியில் வைத்து 3 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருக்கின்றனர். 

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு வரப்பட்ட கசிப்பே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்களும் சான்றுப் பொருட்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு