நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நாளை கொடியேற்றம்

ஆசிரியர் - Admin
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை(14) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு