யாழ்.காங்கேசன்துறை - காரைக்கால் படகுசேவை ஜனவரியில் ஆரம்பிக்கப்படாது! ஆயத்தப் பணிகள் பூர்த்தியடையவில்லையாம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - காரைக்கால் படகுசேவை ஜனவரியில் ஆரம்பிக்கப்படாது! ஆயத்தப் பணிகள் பூர்த்தியடையவில்லையாம்...

யாழ்.காங்கேசன்துறை - புதுச்சேரி - காரைக்கால் இடையிலான படகுசேவை அடுத்த மாதம் ஆரம்பிக்காது. என கூறியுள்ள இந்திய துறைமுகத்துறை செயலாளர் ஜவகர், சோதனை நிலையப் பணிகள் நடப்பதால் படகு சேவையை ஆரம்பிக்க மேலும் இரு மாதங்களாகும் எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 

மூன்றரை முதல் நான்கு மணி நேர பயணத்துக்கு 5 ஆயிரம் இந்திய ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் - காரைக்காலுக்கு இடையே பயணிகள் படகு சேவை அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளதாக 

இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐந்து நிறுவனங்கள் படகு போக்குவரத்தை நடத்த விண்ணப்பித்தனர். 

அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து ஒப்புதலை மத்திய அரசு மீண்டும் எமக்கு வழங்கும். படகு சேவைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகள் சோதனை நிலையம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.

படகு சேவையை ஜனவரியில் தொடங்குவது கடினம். தற்போதைய பணிகள் நிறைவடைய இரு மாதங்களாகும். அதன்பிறகு படகு போக்குவரத்து திகதி இறுதி செய்யப்படும். வர்த்தகம் மட்டுமில்லாமல் சுற்றுலாவுக்கும் உகந்ததாக இது இருக்கும். 

குறிப்பாக காரைக்கால் திருநள்ளாறு கோயில் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவும் நன்கு வளர்ச்சி அடையும்" என்று குறிப்பிட்டார். படகு போக்குவரத்து தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது,

"காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்தை மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்துக்குள் சென்றடையலாம். பயணக்கட்டணம் ரூ. 5 ஆயிரமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர். படகு சேவையில் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம். அ

த்துடன் ஒரு பயணி 100 கிலோ வரை உடமைகளை எடுத்து செல்லலாம்" என்று தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு