இ.போ.ச - தனியார் பேருந்துகள் பந்தய ஓட்டம்! தனியார் பேருந்து விபத்து, நடு வீதியில் அந்தரித்த பொதுமக்கள்...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச - தனியார் பேருந்துகள் பந்தய ஓட்டம்! தனியார் பேருந்து விபத்து, நடு வீதியில் அந்தரித்த பொதுமக்கள்...

வவுனியா - மன்னார் வீதியில் போட்டிக்கு ஓடிய இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளால் இரு பேருந்துகளிலும் பயணித்த மக்கள் நடு வீதியில் நின்று அந்தரித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே போட்டி ஓட்டத்தில் தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகளும் குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிக்கு சென்றுள்ளன.

இதன்போது குறித்த தனியார் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு