22 கிலோ தங்கம் மற்றும் 40 கோடி பெறுமதியான தங்க துகள்களுடன் 4 பேர் கைது! இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாம்...

ஆசிரியர் - Editor I
22 கிலோ தங்கம் மற்றும் 40 கோடி பெறுமதியான தங்க துகள்களுடன் 4 பேர் கைது! இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாம்...

சுமார் 22 கிலோ தங்கம் மற்றும் 40 கோடி ரூபாய் பெறுமதியான தங்க துகள்களை தமிழகம் - சென்னையலிருந்து கடத்தவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த 4 பேரின் பயண பொதிகளை சுங்கப் பிரிவினர் சோதனை செய்தபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இது இலங்கை சுங்க வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய தங்கம் இது என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  இந்திய புலனாய்வு நிறுவனம் வழங்கிய தகவலின்படி,

சென்னையில் இருந்து வந்த நான்கு பயணிகளை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களில் மூவர் துபாயிலிருந்து சென்னை வந்து 

அங்கிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு