போதையின் உச்ச கட்டத்தில் காதலனை சுட்ட மாடல் அழகி!! -நிர்வாணமாக தப்பி ஓட்டம்-

ஆசிரியர் - Editor II
போதையின் உச்ச கட்டத்தில் காதலனை சுட்ட மாடல் அழகி!! -நிர்வாணமாக தப்பி ஓட்டம்-

போதை உச்சத்துக்கு ஏறிய நிலையில் காதலனை சுட்ட மாடல் அழகி ஒருவர் அங்கிருந்து நிர்வாணமாக தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பிரேசிலில் நடந்துள்ளது. 

அந்நாட்டைச் சேர்ந்த 31 வயதான மார்செல்லா எலன் என்பவர் 'மாடலிங்' செய்து வருகிறார். இவர், 40 வயதான தொழிலதிபரான ஜோர்டான் லோம்பார்டி என்பவரை காதலித்தார். 

சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் பிரேசிலியா நகரில் உள்ள சர்ச்சில் ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்ய, பிரேசிலியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர்.

அங்கு, இருவரும் மது அருந்தி, கஞ்சா புகைத்து உச்சகட்ட போதையை அடைந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மார்செல்லா, துப்பாக்கியை எடுத்து லோம்பார்டியின் கழுத்தில் சுட்டார். 

பின், தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதைக் கூட அறியாமல், காரை எடுத்துக் கொண்டு ஹோட்டலின் பிரதான கதவுகளை இடித்து தள்ளி தப்பினார். ஆனால், வழியில் கார் நின்று விட்டது.

மார்செல்லா அந்த வழியாக வந்த ஒரு லொரியை மடக்கி, அதன் சாரதியை துப்பாக்கியை காட்டி மிரட்டி அதில் பயணம் செய்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் பெட்ரோல் போட வேண்டும் என கூறி லொரியை ஓரம் கட்டிய சாரதி, அங்கிருந்து தப்பி ஓடினார். பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பொலிஸார் மார்செல்லாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு