காதல் திருமணம் செய்த மகள்!! -கடத்திச்சென்று மொட்டை அடித்த பெற்றோர்-

ஆசிரியர் - Editor II
காதல் திருமணம் செய்த மகள்!! -கடத்திச்சென்று மொட்டை அடித்த பெற்றோர்-

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கடத்திச் சென்று அவருக்கு மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். 

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர் அயல் ஊரை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை காதலித்து 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். மகள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அச்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். 

சம்பவத்தன்று இரண்டு கார்களில் உறவினர்களுடன் காதல் தம்பதி வசித்த வீட்டிற்கு சென்ற பெற்றோர் தங்கள் மகள் அச்சிதாவை மட்டும் காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிதாவுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரை அலங்கோலப்படுத்துவதாக நினைத்து தலைமுடியையும் மொட்டை அடித்துள்ளனர். பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டுள்ளனர். 

இந்நிலையில் அச்சிதா கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் பெண்ணை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக, அவருடைய பெற்றோர் மற்றும் தாய்மாமன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு