இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவரின் கண் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவரின் கண் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு!

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு இலக்கான தமிழக மீனவர் ஒருவருடைய கண் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தொிவிக்கின்றன. 

இராமேஸ்வரத்தில் இருந்து 14ஆம் திகதி மீன்பிடிக்க வந்த மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் நீண்ட நேரம் தாக்குதல் நடத்திய பின் விடுவித்தமையினால் 

15 ஆம் திகதி காலை கரை திரும்பிய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் ஓர் கண்ணில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகவும்,

இதனால் வேறு வழியின்றி அவருடைய கண் அகற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு