தாயின் பாசப் போராட்டம்!! -இறந்த குட்டியின் உடலுடன் 5 நாட்களாக சுற்றும் தாய் குரங்கு-

ஆசிரியர் - Editor II
தாயின் பாசப் போராட்டம்!! -இறந்த குட்டியின் உடலுடன் 5 நாட்களாக சுற்றும் தாய் குரங்கு-

இறந்த குட்டியின் உடலுடன் 5 நாட்களாக சுற்றித்திரியும் தாய் குரங்கின் பாசப் போராட்டம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையம் அருகே இறந்த குட்டியின் உடலுடன் தாய் குரங்கு ஒன்று 5 நாட்களாக சுற்றி வருவது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

குறித்த பேருந்து நிலையம் அருகே கடந்த 11 ஆம் திகதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி குரங்கு ஒன்று இறந்தது. இதை அறியாத தாய் குரங்கு குட்டி குரங்கு உடல் அருகே அமர்ந்தது. மேலும் எங்கு சென்றாலும் இறந்த குட்டி குரங்கின் உடலுடன் செல்கிறது.

அருகில் யாராவது சென்றால் உடனடியாக குட்டியின் உடலுடன் மரத்தில் ஏறி அமர்ந்து விடுகிறது. மேலும் தாய் குரங்கு அவ்வப்போது குட்டியின் தலையை தட்டி விடுகிறது. உணவு சாப்பிடும் போதும் ஒரு கையில் உணவு சாப்பிட்டு மற்றொரு கையில் குட்டியின் உடலை வைத்து கெட்டியாக பிடித்துக் கொள்கிறது. இச் சம்பவம் பார்ப்பவர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு