வேலியே பயிரை மேய்ந்தது!! -பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவனுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை-

ஆசிரியர் - Editor II
வேலியே பயிரை மேய்ந்தது!! -பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவனுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை-

பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவனுக்கு மதுபானம் கொடுத்த ஆசிரியை ஒருவர் அவரை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தொரியவருவது:-

திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டுள்ளான். சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து விசாரித்தனர்.

இதன் போது குறித்த மாணவன் ஆசிரியை ஒருவருடன் பிரத்தியோக வகுப்பிற்கு சென்று வருவதாகவும், அந்த ஆசிரியை குறித்த மாணவனுக்கு மதுபானம் கொடுத்து, அவரை பலாத்காரம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இச் சம்பவம் குறித்து மண்ணுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது. குற்றத்தை ஆசிரியை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு