இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்குள் 14 வயது சிறுவனும் உள்ளடக்கம்!

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்குள் 14 வயது சிறுவனும் உள்ளடக்கம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று  இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய ரோலரை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதுடன் மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த சிறுவனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் சிறுவனாக அறியப்படும் நிலையில்  ரோலர் முதலாளி  குறித்த சிறுவனை தொழிலுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு